முகப்பு | தொடக்கம் |
மயங்கு இருங் கருவிய விசும்பு |
365 |
'மயங்கு இருங் கருவிய விசும்பு முகன் ஆக, |
|
இயங்கிய இரு சுடர் கண் என, பெயரிய |
|
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம், |
|
வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப் |
|
5 |
பொன்அம் திகிரி முன் சமத்து உருட்டி, |
பொருநர்க் காணாச் செரு மிகு முன்பின் |
|
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் |
|
விலை நலப் பெண்டிரின் பலர் மீக்கூற, |
|
உள்ளேன் வாழியர், யான்' எனப் பல் மாண் |
|
10 |
நிலமகள் அழுத காஞ்சியும் |
உண்டு என உரைப்பரால், உணர்ந்திசினோரே. |
|
திணை காஞ்சி; துறை பெருங்காஞ்சி.
| |
மார்க்கண்டேயனார் பாடியது.
|