முகப்பு | தொடக்கம் |
மலை வான் கொள்க!' என |
143 |
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய், |
|
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக் |
|
கடவுள் பேணிய குறவர் மாக்கள், |
|
பெயல் கண்மாறிய உவகையர், சாரல் |
|
5 |
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் |
கை வள் ஈகைக் கடு மான் பேக! |
|
யார்கொல் அளியள்தானே நெருநல், |
|
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென, |
|
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி |
|
10 |
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண், |
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, |
|
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது |
|
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள், |
|
முலையகம் நனைப்ப, விம்மி, |
|
15 |
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே? |
திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
| |
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
|