முகப்பு | தொடக்கம் |
மழை அணி குன்றத்துக் கிழவன் |
153 |
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும், |
|
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், |
|
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, |
|
அடு போர் ஆனா, ஆதன் ஓரி |
|
5 |
மாரி வண் கொடை காணிய, நன்றும் |
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; |
|
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை |
|
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், |
|
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, |
|
10 |
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக் |
கூடு கொள் இன் இயம் கறங்க, |
|
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|