முகப்பு | தொடக்கம் |
மன்பதை காக்கும் நின் புரைமை |
210 |
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது, |
|
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, |
|
நும்மனோரும் மற்று இனையர் ஆயின், |
|
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; |
|
5 |
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி |
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின் |
|
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், |
|
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் |
|
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என |
|
10 |
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் |
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை |
|
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்: |
|
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர் |
|
அருங் கடி முனை அரண் போலப் |
|
15 |
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|