மன்றப் பலவின் மாச் சினை

128
மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
5
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.