முகப்பு | தொடக்கம் |
மனைக்கு விளக்கு ஆகிய |
314 |
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன், |
|
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை, |
|
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை, |
|
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க் |
|
5 |
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து |
நிறை அழிந்து எழுதரு தானைக்குச் |
|
சிறையும் தானே தன் இறை விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஐயூர் முடவனார் பாடியது.
|