முகப்பு | தொடக்கம் |
மாசு அற விசித்த |
50 |
மாசு அற விசித்த வார்புறு வள்பின் |
|
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை |
|
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், |
|
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, |
|
5 |
குருதி வேட்கை உரு கெழு முரசம் |
மண்ணி வாரா அளவை, எண்ணெய் |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, |
|
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை |
|
10 |
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; |
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் |
|
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென |
|
வீசியோயே; வியலிடம் கமழ, |
|
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது |
|
15 |
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை |
விளங்கக் கேட்ட மாறுகொல் |
|
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
|