மா வாராதே; மா வாராதே;

273
மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே
5
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெரு மரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?

திணை தும்பை; துறை குதிரை மறம்.
எருமை வெளியனார் பாடியது.