முகப்பு | தொடக்கம் |
மீன் திகழ் விசும்பில் |
25 |
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல |
|
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, |
|
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, |
|
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, |
|
5 |
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை |
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, |
|
பிணியுறு முரசம் கொண்ட காலை, |
|
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் |
|
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! |
|
10 |
முலை பொலி ஆகம் உருப்ப நூறி, |
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் |
|
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, |
|
அவிர் அறல் கடுக்கும் அம் மென் |
|
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனைக் கல்லாடனார் பாடியது.
|