முகப்பு | தொடக்கம் |
மீன் நொடுத்து நெல் குவைஇ |
343 |
'மீன் நொடுத்து நெல் குவைஇ, |
|
மிசை அம்பியின் மனை மறுக்குந்து, |
|
மனைக் குவைஇய கறி மூடையால், |
|
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து; |
|
5 |
கலம் தந்த பொற் பரிசம் |
கழித் தோணியான், கரை சேர்க்குந்து; |
|
மலைத் தாரமும் கடல் தாரமும் |
|
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் |
|
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன் |
|
10 |
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, |
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும், |
|
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத் |
|
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர், |
|
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை |
|
15 |
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து |
இடை மதில் சேக்கும் புரிசை, |
|
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|