முகப்பு | தொடக்கம் |
முற்றிய திருவின் மூவர் ஆயினும் |
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|