முகப்பு | தொடக்கம் |
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! |
132 |
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! |
|
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே! |
|
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! |
|
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி |
|
5 |
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல |
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் |
|
வட திசையதுவே வான் தோய் இமயம். |
|
தென் திசை ஆஅய் குடி இன்றாயின், |
|
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|