முகப்பு | தொடக்கம் |
மென்பாலான் உடன் அணைஇ |
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
...................................................................................... |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
................................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|