முகப்பு | தொடக்கம் |
மைம்மீன் புகையினும் |
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|