முகப்பு | தொடக்கம் |
யாங்குப் பெரிதுஆயினும் |
245 |
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே, |
|
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்? |
|
கள்ளி போகிய களரி மருங்கின் |
|
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, |
|
5 |
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, |
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை; |
|
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.
|