முகப்பு | தொடக்கம் |
யாவிர் ஆயினும் |
88 |
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு |
|
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் |
|
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், |
|
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் |
|
5 |
விழவு மேம்பட்ட நல் போர் |
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|