முகப்பு | தொடக்கம் |
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
136 |
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
|
இழை வலந்த பல் துன்னத்து |
|
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ |
|
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த |
|
5 |
பேஎன் பகை என ஒன்று என்கோ? |
உண்ணாமையின் ஊன் வாடி, |
|
தெண் நீரின் கண் மல்கி, |
|
கசிவுற்ற என் பல் கிளையொடு |
|
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
10 |
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், |
'நின்னது தா' என, நிலை தளர, |
|
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், |
|
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் |
|
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
15 |
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' |
எனக் கருதி, பெயர் ஏத்தி, |
|
வாய் ஆர நின் இசை நம்பி, |
|
சுடர் சுட்ட சுரத்து ஏறி, |
|
இவண் வந்த பெரு நசையேம்; |
|
20 |
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; |
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, |
|
அனைத்து உரைத்தனன் யான் ஆக, |
|
நினக்கு ஒத்தது நீ நாடி, |
|
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், |
|
25 |
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை |
நுண் பல மணலினும் ஏத்தி, |
|
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
|