முகப்பு | தொடக்கம் |
யாழொடும் கொள்ளா |
92 |
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; |
|
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு |
|
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; |
|
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் |
|
5 |
கடி மதில் அரண் பல கடந்த |
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|