முகப்பு | தொடக்கம் |
யான் வாழும் நாளும் |
173 |
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! |
|
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; |
|
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன |
|
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; |
|
5 |
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, |
முட்டை கொண்டு வன் புலம் சேரும் |
|
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, |
|
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் |
|
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், |
|
10 |
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; |
பசிப்பிணி மருத்துவன் இல்லம் |
|
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
|