முகப்பு | தொடக்கம் |
வடாஅது பனி படு |
6 |
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், |
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், |
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், |
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், |
|
5 |
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் |
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது |
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது, |
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் |
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் |
|
10 |
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! |
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, |
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் |
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, |
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, |
|
15 |
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் |
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, |
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் |
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! |
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த |
|
20 |
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! |
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் |
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! |
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை |
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! |
|
25 |
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய |
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! |
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் |
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும், |
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! |
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|