முகப்பு | தொடக்கம் |
வணர் கோட்டுச் சீறியாழ் |
155 |
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, |
|
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, |
|
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், |
|
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ |
|
5 |
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, |
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் |
|
கொண் பெருங் கானத்துக் கிழவன் |
|
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|