6. தென்சொற்கு வடமொழிப் பொருள் கூறல்

எ - டு : அங்கணம் = முற்றம்

7. சொற் பகுப்புத் தவறு 

எ - டு : பெற்றத்தால்- 'பெற்ற' வென்பதனுள் அகரமும் அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன" (குறள். 524 உரை)

8. சொல் வரலாற்றுத் தவறு

எ - டு : அழுக்காறென்பது ஒரு சொல்-அச்சொற்பின் னழுக்காற்றைச் செய்யாமை யென்னும் பொருள்பட எதிர்மறை யாகாரமும் மகர வைகார விகுதியும் பெற்று அழுக்காறாமையென நின்றது. (அழுக்காறாமை யதிகார முகவுரை)

9. சொற்பொருள் தவறு

எ - டு : இனிது = எளிது (குறள், 1103)

10. அதிகாரப் பெயர் மாற்று 

எ - டு : மக்கட்பேறு = புதல்வரைப் பெறுதல்

11. சுட்டுமரபறியாமை

எ - டு : "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்" (குறள். 49)

அஃதும் = எனைத்துறவறமோ வெனின்.

12. இருகுறளைச் செயற்கையாக இணைத்தல்

எ - டு : 631,632.

இங்ஙனம் இவர் இந்நூற்கு ஆரியச் சார்பான உரை வரைந்திருப்பதற்கு, தமிழகப் பிராமணர் தொன்றுதொட்டுத் தமிழ் நூலாசிருயரும் நுவலாசிரியரும் உரையாசிரியருமாகி ஆரியக் கருத்துக்களைத் தமிழிலக்கியத்திற் புகுத்தி, தமிழரை அடிமைப்படுத்தியிருப்பதே அடிப்படைக் கரணியமாம்.

பரிமேலழகருரையினும் இவ்வுரை திருந்தியுள்ள வகைகள் 

1. உரைத்திருத்தம் 

எ - டு : முற்றும் - குறள். 913
ஒரு மருங்கு - குறள். 1030