| 
 6. தென்சொற்கு
வடமொழிப் பொருள் கூறல் 
 எ - டு : அங்கணம் =
 முற்றம் 
 7.	சொற்
 பகுப்புத் தவறு  
 
	எ - டு : பெற்றத்தால்- 'பெற்ற' வென்பதனுள் அகரமும் அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற்
 றொக்கன" (குறள். 524 உரை) 
 8.	சொல்
 வரலாற்றுத் தவறு 
 எ - டு :	அழுக்காறென்பது ஒரு சொல்-அச்சொற்பின் னழுக்காற்றைச் செய்யாமை யென்னும் பொருள்பட எதிர்மறை யாகாரமும் மகர
 வைகார விகுதியும் பெற்று அழுக்காறாமையென நின்றது.
 (அழுக்காறாமை யதிகார முகவுரை) 
 9.
 சொற்பொருள் தவறு 
 எ - டு : இனிது = எளிது (குறள், 1103) 
 10. அதிகாரப்
 பெயர் மாற்று  
 
	எ - டு : மக்கட்பேறு = புதல்வரைப் பெறுதல் 
 11. சுட்டுமரபறியாமை 
 எ - டு :
 "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்" (குறள்.
 49) 
 
 அஃதும் = எனைத்துறவறமோ வெனின். 
 12. இருகுறளைச்
 செயற்கையாக இணைத்தல் 
 எ - டு : 631,632. 
 இங்ஙனம்
 இவர் இந்நூற்கு ஆரியச்
 சார்பான உரை வரைந்திருப்பதற்கு, தமிழகப்
 பிராமணர் தொன்றுதொட்டுத் தமிழ் நூலாசிருயரும்
 நுவலாசிரியரும் உரையாசிரியருமாகி ஆரியக்
 கருத்துக்களைத் தமிழிலக்கியத்திற் புகுத்தி, தமிழரை அடிமைப்படுத்தியிருப்பதே அடிப்படைக்
 கரணியமாம். 
 பரிமேலழகருரையினும்
 இவ்வுரை திருந்தியுள்ள வகைகள்  
 
	1. உரைத்திருத்தம்  
 
	எ - டு : முற்றும் - குறள். 913 
 ஒரு மருங்கு - குறள். 1030 
  
 |