6. தென்சொற்கு
வடமொழிப் பொருள் கூறல்
எ - டு : அங்கணம் =
முற்றம்
7. சொற்
பகுப்புத் தவறு
எ - டு : பெற்றத்தால்- 'பெற்ற' வென்பதனுள் அகரமும் அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற்
றொக்கன" (குறள். 524 உரை)
8. சொல்
வரலாற்றுத் தவறு
எ - டு : அழுக்காறென்பது ஒரு சொல்-அச்சொற்பின் னழுக்காற்றைச் செய்யாமை யென்னும் பொருள்பட எதிர்மறை யாகாரமும் மகர
வைகார விகுதியும் பெற்று அழுக்காறாமையென நின்றது.
(அழுக்காறாமை யதிகார முகவுரை)
9.
சொற்பொருள் தவறு
எ - டு : இனிது = எளிது (குறள், 1103)
10. அதிகாரப்
பெயர் மாற்று
எ - டு : மக்கட்பேறு = புதல்வரைப் பெறுதல்
11. சுட்டுமரபறியாமை
எ - டு :
"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்" (குறள்.
49)
அஃதும் = எனைத்துறவறமோ வெனின்.
12. இருகுறளைச்
செயற்கையாக இணைத்தல்
எ - டு : 631,632.
இங்ஙனம்
இவர் இந்நூற்கு ஆரியச்
சார்பான உரை வரைந்திருப்பதற்கு, தமிழகப்
பிராமணர் தொன்றுதொட்டுத் தமிழ் நூலாசிருயரும்
நுவலாசிரியரும் உரையாசிரியருமாகி ஆரியக்
கருத்துக்களைத் தமிழிலக்கியத்திற் புகுத்தி, தமிழரை அடிமைப்படுத்தியிருப்பதே அடிப்படைக்
கரணியமாம்.
பரிமேலழகருரையினும்
இவ்வுரை திருந்தியுள்ள வகைகள்
1. உரைத்திருத்தம்
எ - டு : முற்றும் - குறள். 913
ஒரு மருங்கு - குறள். 1030
|