2. உரைவிளக்கம் 

எ - டு : குறள், 235, 338

3. சொல்விளக்கம் 

எ - டு : குறள். 127

4. கொளு விளக்கம் 

எ - டு : குறள். 996, 1225

5. மூலச்சொல்லையே உரையில் ஆளாமை 

எ - டு : குறள், 1113, 1328

இனி, இவ்வுரையைக் குறள்தொறும் பரிமேலழகருரையொடு ஒப்புநோக்கினும், பல விடத்துப் பல வகையில் திருத்தமும் வேறுபாடுங் கண்டு இப்புத்துரையின் தேவையை உணரலாம். ஆயின், பரிமேலழகருரையால் ஒரு பெரு நன்மையும் இல்லையோவெனின், உண்டு; அது எதுவெனின் அவருரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கப்படாதிருந்ததேயென்க; எது போலவெனின், முதலிரு கழகத்தும் வழங்கிய இயற்றமிழிலக்கணம் முழுதும், அதன் தொகுப்பாசிரியராகிய தொல்காப்பியரது தொல்காப்பியம் என்னும் பிண்டநூலான் போற்றப்பட்டு வந்திருப்பது போன்று என்க.

தாமரைச் செல்வன் தமிழநூ லுலகெங்கும்
காமரு கட்டடங் கண்குளிரப் -போமுறை
அச்சிட்ட சுப்பையா யாய்ந்தேயிம் மெய்ந்நூற்கும்
மெச்சுற்றுப் பார்த்தனன் மெய்ப்பு.

இவ்வுரை யச்சீட் டிறுதி தனிநின்று
செவ்வகை பார்த்த செயல்நோக்கின்-எவ்வண்
சுழன்றுந் தமிழுலகம் சுப்பையாப் பின்னாம்
உழந்தும் அவனே தலை.

சேர்ப்பு : இத்திருக்குறள் தமிழ் மரபுரைக்குப் பிழைதிருத்தப் பட்டியும் அருஞ்சொல் அகர முதலியும் தொகுத்த திரு. இராசிபுரம் சேயோனுக்கும், அதிகார அகரமுதலியும் குறள் முதற்குறிப்பகர முதலியும் தொகுத்த திரு. ஆரணிச் செல்வராசனார்க்கும் என் நன்றி உரித்தாம்.