முப்பால் தமிழ்மரபு முன்னிய விவ்வுரையை
எப்போதும் போல இனிதாகத்-தப்பாமல்
அச்சிட்டுத் தந்தான் அழகிய பாரிப்பேர்
அச்சகத்தான் நாரா யணன்.

கார்வாழி யேர்வாழி கன்னித் தமிழ்வாழி
சீரார்பல் செல்வஞ் சிறந்துதவப் - பார்நீடு
பேரோங்கப் பாரிப் பெயர்தாங்கும் அச்சகத்தான்
நாரா யணன்வாழி நன்கு.

ஞா. தேவநேயன்.

மேலைத் தாம்பரம், சென்னை - 45,
18, கன்னி, 2000 
(4 - 10 - 1969)