முப்பால் தமிழ்மரபு முன்னிய விவ்வுரையை எப்போதும் போல இனிதாகத்-தப்பாமல் அச்சிட்டுத் தந்தான் அழகிய பாரிப்பேர் அச்சகத்தான் நாரா யணன்.
கார்வாழி யேர்வாழி கன்னித் தமிழ்வாழி சீரார்பல் செல்வஞ் சிறந்துதவப் - பார்நீடு பேரோங்கப் பாரிப் பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்வாழி நன்கு.
ஞா. தேவநேயன்.
மேலைத் தாம்பரம், சென்னை - 45, 18, கன்னி, 2000 (4 - 10 - 1969)