"பாலெல்லாம்
நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ."
(பரிமேலழகருரைச்
சிறப்புப் பாயிரம்)
"ஆலும்
வேலும் பல்லுக் குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி."
(பழமொழி)
என்பனவும்;
புலமைச் சிறப்பை,
"புலவர்
திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல் நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்."
என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்;
கருத்துப் பரப்பை,
"மாலுங்
குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து."
என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்;
சுருங்கச் சொல்லலை,
"தினையளவு
போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி."
என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; விளங்கவைத்தலை,
"பரந்த
பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச்
சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்."
என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்;
உணர்த்தும்.
இங்ஙனம்
திருக்குறள் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற
உலகத்தமிழ் நூலாம். அதனால், முப்பொருண்மை
பற்றி முப்பால், முப்பால் நூல் என்றும்;
ஆசிரியனை நோக்கி வள்ளுவம், வள்ளுவநூல்,
வள்ளுவப்பயன் என்றும்; உண்மை யுரைத்தல்
பற்றிப் பொய்யா மொழி என்றும்;
மந்திரத்தன்மைபற்றி வள்ளுவர் வாய்மொழி
யென்றும் மறைத்தன்மை பற்றித் தமிழ்மறை,
பொதுமைற என்றும், தெய்வத்தன்மை பற்றித்
தெய்வநூல் என்றும்;
|