3. திருக்குறள்
வடசொற்கள்.
திருக்குறளிலுள்ள வடசொற்கள் பின்வருமாறு நால்வகைப்பட்ட பதினேழாம்.
(1).
வடநாட்டுச்சொல்:
ஆதி,இந்திரன்.
ஆதி என்பது தொடக்கம் என்று பொருள்படுவது; பெண்பாற்பெயராயின் ஆதன் என்பதன்
பெண்பால் வடிவாம். அது தூயதென்சொல்.அதுவன்று
இங்குள்ளது.
இந்திரன் என்பது வட இந்தியத் திரவிடர் வேந்தன் என்னும் மருதநிலத் தமிழ்த் தெய்வத்திற்கு வழங்கிய பெயர். இத்தெய்வமும் இச்சொல்லும்
மேலையாரியத்தில் இல்லையென்று மாக்கசு முல்லர்
கூறியிருதுப்பது கவனிக்கத்தக்கது.
(2).
தமிழ்த்திரிசொல்:
அமரர்,
காரணம், பாக்கியம், வித்தகர்;
அல்-அ. மடி-மரி-மரன்-மரர். அ+மரர்=அமரர்(வ,).
மரி - L.mori,
ம்ரு(இ.வே.), கருத்தல்= கைகருக்குமாறு வினைசெய்தல்.இவ்வினை இன்று வழக்கற்றது. கரு-கருவி. கரு-
கரணம்= செய்கை, செய்யுங் கருவி. கரணம்-காரணம் (வ).
பகு-பாகு-பாக்கு=பகுதி,நற்பகுதி,நற்பேறு பாக்கு+ இயம்(ஈறு)= பாக்கியம்.
விழித்தல்=கண்திறத்தல், பார்த்தல், காணுதல், அறிதல்.விழி=பார்வை,
கண், அறிவு, ஓதி (ஞானம்).
விழி=விடி(இலத்.)- வித்(வ.)-வித்தகம்-வித்தகன்- வித்தகர். சமற்கிருத அகரமுதலி விதக்த
(vidagdha) என்று மூலங்காட்டும். இவற்றின் விரிவையும் விளக்கத்தையும் என் வடமொழி வரலாற்றுட் கண்டுகொள்க.
(3).
மேலையாரியச்சொல்:
அந்தம், அன்னம், நாமம்.
OE ende, E end, OS endi OHG enti, ON
endir,Goth andeis, IA அந்த
OE garna, OHG ganazzo, RV ஹம்ஸ-அன்னம்,
|