புர: புரத்தல்=காத்தல். புர - புரம்=காப்பு. புர-புரவு=காப்பு. புரவலன்=காவலன். புரந்தா-புறந்தா, புறந்தருதல்=பாதுகாப்பளித்தல், காத்தல். புரந்தா-புரந்தான்=காவலன், அரசன். புரந்தரன்-புரந்தர (வ.) = இந்திரன், விண்ணோர், காவலன். புரி: புரிதல் = விரும்புதல் . புரி - ப்ரீ (வ.) புரை: புரை=துளை , அறை , வீடு , கோயில் . துணைக்கருத் தினின்று குற்றமென்னுங் கருத்துந் தோன்றும் . புரை - புர ( வ.) பூசனை:
18 ஆம் குறளுரையைப் பார்க்க. பூதம்: பூத்தல் = தோன்றுதல். "அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று ."
(நீதிநெறி. 5) இப்பாவிலுள்ள பூத்தற் சொல் வேறு ; மலர்தலைக் குறிக்கும் பூத்தற் சொல் வேறு . மலர்தலைக் குறிப்பது பொலிவை யுணர்த்தும் பொல் என்னும் அடியினின்று திரிந்ததாகும். புகு -(பொகு) - போகில் = அரும்பு . புகு - பூ - போ - போத்து = வளார் , இளங்கிளை . போத்துவெடித்தல் என்னும் வழக்கை நோக்குக . பூ: பூதம் = பெருவெளியில் தோன்றிய நால்வகை அல்லது ஐவகைப் பொருள்களுள் ஒன்று . " வளியென வரூஉம் பூதக் கிளவியும் " (தொல்.
242) " பால்வரை தெய்வம் வினையே பூதம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன. "(தொல்.
541) பூ: பூ , (வ.
bhu) , இச்சொல்லினின்றே புவந , பூமி , பவிஷ்ய , பாவந . முதலிய முன்னொட்டுப் பெறாச் சொற்களும் , அநுபவ ,
அநுபூதி , உத்பவ , ஸ்வயம்பூ முதலிய முன்னொட்டுப் பெற்ற சொற்களுமாக நூற்றுக்கணக்கான வடசொற்கள் தோன்றுமென அறிக .
|