(6) மங்கலச் சின்னம்.எண்மங்கலமும் மங்கலம் பதினாறும். (7) மங்கல வழக்கு.
(நன். 267). (8) நன்மை." மங்கல மென்ப
மனைமாட்ச"(குறள். 60) மங்கலம்-மங்களம்.
வடவர் காட்டும் மூலம்.மங்க்=செல்,இயங்கு. பகுத்தறிவுடையார் கண்டு தெளிக. மந்திரி:
முன்னுதல் = கருதுதல், எண்ணுதல். முன் - மன். மன்+திரம்(திறம்)
= மந்திரம் ஒ.நோ: மன்று - மந்து - மந்தை. மந்திரம்=எண்ணத்தின் திண்மை,
சூழ்வினை. மந்திரம்-மந்திரி=மந்திரம் செய்பவன்,அரசியல் வினைகளைச் சூழ்பவன். மந்திரம்-மந்த்ரம்(வ.).
மந்திரி-மந்த்ரின்(வ.). "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப." என்று தொல்காப்பியம்
(1334) கூறுவது மதவியல் பற்றிய மந்திரமேனும், சொல் வேறன்மை யறிக. மயிர்:
மை=கருமை.மை-(மய்)-மயிர்=கரிய முடி.ஒ. நோ:ஐ-அயிர்,
பை-பயிர், உய்-உயிர், செய்-செயிர், செயிர்த்தல்=சிவத்தல்.
சினத்தல். மயிர்-மசிர்-ச்மச்ரு(வ.). மயில் மை=கருமை,நீலம்.மை+இல்=மயில்=நீலப் பீலிக் கண்களையுடைய குறிஞ்சி நிலப்பறவை.
இது குமரி நாட்டிலேயே குறிஞ்சி வாணரால் முருகனூர்தியாகக் கொள்ளப்பட்டு விட்டது.
மயில்-மயூர(வ). மன் முன்னுதல்=கருதுதல்,எண்ணுதல்,சூழ்தல்.
ASmunan=to think. முன்-மன்ப=பகுத்தறிவும் மதிநுட்பமும் கொண்டு சிறப்பாகக் கருதி யறியும் மாந்தன். மன்பதை=மக்கட்கூட்டம். "ஆறறி வதுவே யவற்றோடு மனனே"
(தொல்.1324). "மக்கள் தாமே யாறறி உயிரே" (153) மன்-மநு(வ.),OE man,OS,OHG man,E man
,Goth. manna.
|