மனம்: முன்னுதல் கருதுதல். முன்-முன்னம்=மனம்(திவா,) முன்னம்-முனம்-மனம்-மனஸ்(வ.), L mens,(AS munan to think) OE (ge) mynd,ME myn d,E mind.

மாத்திரை: 406 ஆம் குறளுரையைப் பார்க்க.

மாதர்: மா=அழகு மா-மாது=அழகு,(அழகுள்ள) பெண்,(பெரும்பாலும் பெண்மேற் கொள்ளும்) காதல். மாது-மாதர்=அழகு,பெண்,காதல்.

மணந்த பெண்டிரெல்லாரும் பெரும்பாலும் பின்னர்த் தாய்மாராதலாலும் பெண்தெய்வக் கருத்தில் தாய்மைக் கருத்துங் கலந்திருப்பதனாலும். மகள் என்னும் சொல் தாயையுங் குறித்தாலும், மாதர் என்னும் சொல் ஆரியமொழிகளில் தாய்ப்பொருள் பெறலாயிற்று.

L mater ,GK mater,G.mutter,E mother,வ.மாத்ரு.

மாலை முள்-முள்கு-முள்குதல்=முயங்குதல், கலத்தல் முள்-(முய்)-முய-முயங்கு-முயக்கு-முயக்கம். முயங்கு-மயங்கு-மயக்கு-மயக்கம். முய-மய. மயத்தல்=மயங்குதல், கலத்தல். மய-மயல்-மால்=மயக்கம், கலப்பு. மால்-மாலை=பூக்கள்கலந்தகோவை.

இரவுங் கலந்த வேளை.மாலை-மாலா(வ.),

மானம்: மன்=பெருமை, பெரியோன், தலைவன், கணவன், அரசன். மன்-மான்-மானம்=பெருமை. மானம்-மான்(வ.).

மீன்: மின்-மீன்=மின்னும் வெண்ணிறமீன்,மின்னும் வெள்ளி அல்லது வான்சுடர்.

வெள்ளாட்டின் பெயர் அதன் இனமான காராட்டிற்கும் செவ்வாட்டிற்கும் பொதுப்பெயராக வழங்கினாற்போல, மின்னும் கெண்டை மீன் பெயர் அதன் இனமான பிறவகைகட்கும் வழங்கி வருகின்ற தென்க.

மீன்-மீனம்(பெருமீன்)-மீன(வ.).

முகம். முகு-முகிழ், முகிழ்தல்=தோன்றுதல்.

முகு-முகம்.முகஞ்செய்தல்=தோன்றுதல்.