நல்கூர்வேள்வியார்
21.உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு
(பொ--ரை.)
வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்;
வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.
தொடித்தலைவிழுத்தண்டினார்
22.அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.
(பொ--ரை.) அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை
அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று,
இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே
வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்!
நாடு
அரணுள் அடக்கப்பட்டது.
வெள்ளிவீதியார்
23.செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்
(பொ--ரை.)
ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர்
இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே.
இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ
எல்லார்க்கும் பொதுவாம்.
குறிப்பு.-ஆரிய
வேதத்தைச் செய்யாமொழி யென்றது ஒரு துணிச்சல்
மிக்க ஏமாற்று. அதற்கும் திருக்குறட்கும்
பொருள்ஒன்றே
|