|
9 பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை |
|
|
||
|
[ மணிமேகலை மணிபல்லவத்திடைப் |
|
|
பீடிகைகண்டு பிறப்பு உணர்ந்த பாட்டு ] |
|
|
||
|
ஆங்குஅது கண்ட ஆயிழை அறியாள் |
|
|
காந்தள்அம் செங்கை தலைமேல் குவிந்தன |
|
|
தலைமேல் குவிந்த கையள் செங்கண் |
|
|
முலைமேல் கலுழ்ந்துமுத் தத்திரள் உகுத்துஅதின் |
|
5
|
இடமுறை மும்முறை வலமுறை வாராக் |
|
|
||
|
கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன |
|
|
இறுநுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்துஆங்கு |
|
|
எழுவோள் பிறப்பு வழுஇன்று உணர்ந்து |
உரை |
|
தொழுதகை மாதவ! துணிபொருள் உணர்ந்தோய்! |
|
10
|
காயங் கரையில் உரைத்ததை எல்லாம் |
|
|
||
|
வாயே ஆகுதல் மயக்குஅற உணர்ந்தேன் |
|
|
காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் |
|
|
பூருவ தேயம் பொறைகெட வாழும் |
|
|
அத்தி பதிஎனும் அரசாள் வேந்தன் |
|
15
|
மைத்துனன் ஆகிய பிரம தருமன்! |
உரை |
|
||
|
ஆங்குஅவன் தன்பால் அணைந்துஅறன் உரைப்போய் |
|
|
தீங்கனி நாவல் ஓங்கும்இத் தீவிடை |
|
|
இன்றுஏழ் நாளில் இருநில மாக்கள் |
|
|
நின்றுநடுக்கு எய்த நீள்நில வேந்தே |
|
20
|
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந்நகர் |
|
|
||
|
நாகநல் நாட்டு நானூறு யோசனை |
|
|
வியன்பா தலத்து வீழ்ந்துகேடு எய்தும் |
|
|
இதன்பால் ஒழிகென, |
உரை |
|
மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம் |
|
25
|
ஆவும் மாவும் கொண்டுகழிக என்றே |
|
|
||
|
பறையில் சாற்றி நிறைஅருந் தானையோடு |
|
|
இடவயம் என்னும் இரும்பதி நீங்கி |
|
|
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் |
|
|
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரைச் |
|
30
|
சேய்உயர் பூம்பொழில் பாடிசெய்து இருப்ப, |
உரை |
|
||
|
எங்கோன் நீஆங்கு உரைத்தஅந் நாளிடைத் |
|
|
தங்காது அந்நகர் வீழ்ந்துகேடு எய்தலும் |
|
|
மருள்அறு புலவ!நின் மலர்அடி அதனை |
|
|
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச் |
|
35
|
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய |
|
|
||
|
அருள்அறம் பூண்ட ஒருபேர் இன்பத்து |
|
|
உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள், |
உரை |
|
அரவக் கடல்ஒலி அசோதரம் ஆளும் |
|
|
இரவி வன்மன் ஒருபெருந் தேவி |
|
அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று |
||
|
||
|
இலக்குமி என்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன் |
|
|
அத்தி பதிஎனும் அரசன் பெருந்தேவி |
|
|
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் |
|
|
நீல பதிஎனும் நேர்இழை வயிற்றில் |
|
45
|
காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய |
|
|
||
|
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு |
|
|
பராஅரு மரபின்நின் பாதம் பணிதலும், |
உரை |
|
எட்டுஇரு நாளில்இவ் இராகுலன் தன்னைத் |
|
|
திட்டி விடம்உணும் செல்உயிர் போனால் |
|
50
|
தீஅழல் அவனொடு சேயிழை மூழ்குவை; |
உரை |
|
||
|
ஏது நிகழ்ச்சி ஈங்குஇன்று ஆகலின் |
|
|
கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய |
|
|
தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப்பு எய்துதி; |
உரை |
|
அணியிழை நினக்குஓர் அருந்துயர் வருநாள் |
|
55
|
மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி |
|
|
||
|
அன்றுஅப் பதியில் ஆர்இருள் எடுத்துத் |
|
|
தென்திசை மருங்கில்ஓர் தீவிடை வைத்தலும் |
உரை |
|
வேக வெந்திறல் நாகநாட்டு அரசர் |
|
|
சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்துஆங்கு |
|
60
|
அறச்செவி திறந்து மறச்செவி அடைத்துப் |
|
|
||
|
பிறவிப்பிணி மருத்துவன் இருந்துஅறம் உரைக்கும் |
|
|
திருந்துஒளி ஆசனம் சென்றுகை தொழுதி; |
|
|
அன்றைப் பகலே உன்பிறப்பு உணர்ந்துஈங்கு |
|
|
இன்றுயான் உரைத்த உரைதெளி வாய்என, |
உரை |
65
|
சாதுயர் கேட்டுத் தளர்ந்துஉகு மனத்தேன் |
|
|
||
|
காதலன் பிறப்பும் காட்டா யோஎன |
|
|
ஆங்குஉனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம் |
|
|
பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை |
|
|
ஈங்குஇவன் என்னும் என்றுஎடுத்து ஓதினை |
|
70
|
ஆங்குஅத் தெய்வதம் வாரா தோஎன |
|
|
||
|
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான்என், |
உரை |
|
||
|
பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை முற்றிற்று. |
|