|
15 பாத்திரம்கொண்டு பிச்சை புக்க காதை |
|
|
||
|
[ மணிமேகலை பாத்திரம்கொண்டு பிச்சைக்குப் |
|
|
பெருந்தெருப்போய பாட்டு ] |
|
|
||
|
இன்னும் கேளாய் இளங்கொடி மாதே | உரை |
|
அந்நாள் அவனை ஓம்பிய நல்ஆத் | |
|
தண்என் சாவகத் தவள மால்வரை | |
|
மண்முகன் என்னும் மாமுனி இடவயின் | |
5
|
பொன்னின் கோட்டது பொன்குளம்பு உடையது | |
|
||
|
தன்நலம் பிறர்தொழத் தான்சென்று எய்தி | |
|
ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம் | |
|
தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும் | உரை |
|
மூன்று காலமும் தோன்றநன்கு உணர்ந்த | |
10
|
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து | |
|
||
|
மழைவளம் சுரப்பவும் மன்உயிர் ஓம்பவும் | |
|
உயிர்கா வலன்வந்து ஒருவன் தோன்றும் | |
|
குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன் | |
|
அடர்ப்பொன் முட்டை அகவையி னான்எனப், | உரை |
15
|
பிணிநோய் இன்றியும் பிறந்துஅறம் செய்ய | |
|
||
|
மணிபல் லவத்திடை மன்உயிர் நீத்தோன் | |
|
தன்காத்து அளித்த தகைஆ அதனை | |
|
ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் | |
|
ஆங்குஅவ் ஆவயிற்று அமரர்கணம் உவப்பத் | |
20
|
தீங்கனி நாவல் ஓங்கும்இத் தீவினுக்கு | |
|
||
|
ஒருதான் ஆகி உலகுதொழத் தோன்றினன். | |
|
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ: | |
|
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து | |
|
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் | |
25
|
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் | |
|
||
|
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து | உரை |
|
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் | |
|
புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது, | |
|
போதி மாதவன் பூமியில் தோன்றும் | |
30
|
காலம் அன்றியும் கண்டன சிறப்புஎனச் | |
|
||
|
சக்கர வாளக் கோட்டம் வாழும் | |
|
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து | |
|
கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய | |
|
அந்தில் பாவை அருளு மாயிடின் | |
35
|
அறிகுவம் என்றே செறிஇருள் சேறலும், | உரை |
|
||
|
மணிபல் லவத்திடை மன்உயிர் நீத்தோன் | |
|
தணியா உயிர்உயச் சாவகத்து உதித்தனன் | |
|
ஆங்குஅவன் தன்திறம் அறவணன் அறியும்என்று | |
|
ஈங்குஎன் நாவை வருத்தியது இதுகேள்: | உரை |
40
|
மண்ஆள் வேந்தன் மண்முகன் என்னும் | |
|
||
|
புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி | |
|
மக்களை இல்லேன் மாதவன் அருளால் | |
|
பெற்றேன் புதல்வனை என்றுஅவன் வளர்ப்ப | |
|
அரைசுஆள் செல்வம் அவன்பால் உண்மையின் | |
45
|
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான். | உரை |
|
||
துறக்க வேந்தன் துய்ப்புஇலன் கொல்லோ | ||
|
அறக்கோல் வேந்தன் அருள்இலன் கொல்லோ | |
|
சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும் | |
|
நலத்தகை இன்றி நல்உயிர்க்கு எல்லாம் | |
50
|
அலத்தல் காலை ஆகியது ஆயிழை | உரை |
|
||
|
வெண்திரை தந்த அமுதை வானோர் | |
|
உண்டுஒழி மிச்சிலை ஒழித்துவைத் தாங்கு | |
|
வறன்ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும் | |
|
அறன்ஓடு ஒழித்தல் ஆயிழை தகாதுஎன, | |
55
|
மாதவன் உரைத்தலும் மணிமே கலைதான் | உரை |
|
||
|
தாயர் தம்மொடு தாழ்ந்துபல ஏத்திக் | |
|
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு | |
|
பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும், | உரை |
|
ஒலித்துஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும் | |
60
|
மெலித்துஉகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் | |
|
||
|
கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய | |
|
வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை | |
|
வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய | |
|
உஞ்சையில் தோன்றிய ஊகி அந்தணன் | |
65
|
உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு | |
|
||
|
பரிவுஉறு மாக்களில் தாம்பரிவு எய்தி, | உரை |
|
உதய குமரன் உளம்கொண்டு ஒளித்த | |
|
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப் | |
|
பிச்சைப் பாத்திரம் கையின்ஏந் தியது | |
70
|
திப்பியம் என்றே சிந்தைநோய் கூர, | உரை |
|
||
|
மணமனை மறுகில் மாதவி ஈன்ற | |
|
அணிமலர்ப் பூங்கொம்பு அகம்மலி உவகையின் | |
|
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம் | |
|
பிச்சை ஏற்றல் பெருந்தகவு உடைத்துஎன, | உரை |
75
|
குளன்அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் | |
|
||
|
ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று | |
|
வான்தரு கற்பின் மனைஉறை மகளிரில் | |
|
தான்தனி ஓங்கிய தகைமையள் அன்றோ | |
|
ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை | |
80
|
நீபுகல் வேண்டும் நேர்இழை என்றனள் | உரை |
|
||
|
வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் | |
|
தென்திசைப் பொதியில்ஓர் சிற்றியாற்று அடைகரை | |
|
மாதவன் தன்னால் வல்வினை உருப்பச் | |
|
சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம் | |
85
|
வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் | |
|
||
காயசண் டிகைஎனும் காரிகை தான்என். | ||
|
உரை | |
|
||
|
பாத்திரம்கொண்டு பிச்சை புக்க காதை முற்றிற்று. |
|
மேல் |