21 கந்திற்பாவை வருவது உரைத்த காதை |
||
[ மணிமேகலை உதயகுமரன் மடிந்ததுகண்டு |
||
உறுதுயர் எய்த, நெடுநிலைக்கந்தின் நின்ற பாவை |
||
வருவது உரைத்து அவள் மயக்கு ஒழித்த பாட்டு ] |
||
கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்தின் | ||
குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் | ||
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த | ||
மதுமலர்க் குழலி மயங்கினள் எழுந்து | உரை | |
5 | விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் | |
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில் | ||
கந்துஉடை நெடுநிலைக் கடவுள் பாவை | ||
அங்குஅவற்கு உரைத்த அற்புதக் கிளவியும் | ||
கேட்டனள் எழுந்து கெடுகஇவ் உருஎனத் | ||
10 | தோட்டலர்க் குழலி உள்வரி நீங்கித், | உரை |
திட்டி விடம்உண நின்உயிர் போம்நாள் | ||
கட்டழல் ஈமத்து என்உயிர் சுட்டேன் | ||
உவவனம் மருங்கில் நின்பால் உள்ளம் | ||
தவிர்வுஇலேன் ஆதலின் தலைமகள் தோன்றி | ||
15 | மணிபல் லவத்திடை என்னைஆங்கு உய்த்துப் | |
பிணிப்புஅறு மாதவன் பீடிகை காட்டி | ||
என்பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி | ||
உன்பிறப்பு எல்லாம் ஒழிவுஇன்று உரைத்தலின் | உரை | |
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் | ||
20 | அறந்தரு சால்பும் மறம்தரு துன்பமும் | |
யான்நினக்கு உரைத்துநின் இடர்வினை ஒழிக்கக் | ||
காயசண் டிகைவடிவு ஆனேன் காதல! | ||
வைவாள் விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின் | ||
வெவ்வினை உருப்ப விளிந்தனை யோஎன | ||
25 | விழுமக் கிளவியின் வெய்துஉயிர்த்துப் புலம்பி | |
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும், | உரை | |
செல்லல் செல்லல் சேய்அரி நெடுங்கண் | ||
அல்லிஅம் தாரோன் தன்பால் செல்லல் | ||
நினக்குஇவன் மகனாத் தோன்றிய தூஉம் | ||
30 | மனக்குஇனி யாற்குநீ மகள்ஆ யதூஉம் | |
பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால் | ||
கண்ட பிறவியே அல்ல காரிகை | ||
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் | ||
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல் | ||
35 | என்றுஇவை சொல்லி இருந்தெய்வம் உரைத்தலும் | உரை |
பொன்திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் | ||
பொய்யா நாவொடுஇப் பொதியிலில் பொருந்திய | ||
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் | ||
விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்குஇவன் | ||
40 | திட்டி விடம்உணச் செல்உயிர் போயதும், | |
நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான் | ||
விஞ்சையன் வாளின் இவன்விளிந் ததூஉம் | ||
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின் | ||
பெறுவேன் தில்லநின் பேர்அருள் ஈங்குஎன, | ||
45 | ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள்எனத் | |
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்: | உரை | |
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரை | ||
மாயம்இல் மாதவன் வருபொருள் உரைத்து | ||
மருள்உடை மாக்கள் மனமாசு கழூஉம் | ||
50 | பிரம தருமனைப் பேணினிர் ஆகி | |
அடிசில் சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் | ||
விடியல் வேலை வேண்டினம் என்றலும் | ||
மாலை நீங்க மனமகிழ்வு எய்திக் | உரை | |
காலை தோன்ற வேலையின் வரூஉ | ||
55 | நடைத்திறத்து இழுக்கி நல்அடி தளர்ந்து | |
மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனைச் | ||
சீலம் நீங்காச் செய்தவத் தோர்க்கு | ||
வேலை பிழைத்த வெகுளி தோன்றத் | ||
தோளும் தலையும் துணிந்துவேறு ஆக | ||
60 | வாளில் தப்பிய வல்வினை அன்றே | |
கூந்தல் மெல்இயல் நின்னோடு | ||
இராகுலன் தன்னை இட்டுஅக லாதது | உரை | |
தலைவன் காக்கும் தம்பொருட்டு ஆகிய | ||
அவல வெவ்வினை என்போர் அறியார் | ||
65 | அறஞ்செய் காதல் அன்பினின் ஆயினும் | |
மறம்செய் துளதுஎனின் வல்வினை ஒழியாது | ||
ஆங்குஅவ் வினைவந்து அணுகும் காலைத் | ||
தீங்குஉறும் உயிரே செய்வினை மருங்கின் | ||
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும | ||
70 | ஆங்குஅவ் வினைகாண் ஆயிழை கணவனை | |
ஈங்கு வந்துஇவ் இடர்செய்து ஒழிந்தது. | உரை | |
இன்னும் கேளாய் இளங்கொடி நல்லாய் | ||
மன்னவன் மகற்கு வருந்துதுயர் எய்தி | ||
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக் | ||
75 | காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கிடும். | உரை |
இடுசிறை நீக்கி இராசமா தேவி | ||
கூட வைக்கும் கொட்பினள் ஆகி | ||
மாதவி மாதவன் மலர்அடி வணங்கித் | ||
தீது கூறஅவள் தன்னொடும் சேர்ந்து | ||
80 | மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டுக் | |
காதலி நின்னையும் காவல் நீக்குவள் | உரை | |
அரசுஆள் செல்வத்து ஆபுத் திரன்பால் | ||
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை | ||
போனால் அவனொடும் பொருள்உரை பொருந்தி | ||
85 | மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து | |
மாயம்இல் செய்தி மணிபல் லவம்எனும் | ||
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் | உரை | |
தீவ திலகையின் தன்திறம் கேட்டுச் | ||
சாவக மன்னன் தன்நாடு அடைந்தபின் | ||
90 | ஆங்குஅத் தீவம்விட்டு அருந்தவன் வடிவாய்ப் | |
பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை; | உரை | |
ஆங்குஅந் நகரத்து அறிபொருள் வினாவும் | ||
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் | உரை | |
இறைவன் எம்கோன் எவ்வுயிர் அனைத்தும் | ||
95 | முறைமையில் படைத்த முதல்வன்என் போர்களும், | |
தன்உரு இல்லோன் பிறஉருப் படைப்போன் | ||
அன்னோன் இறைவன் ஆகும்என் போர்களும், | ||
துன்ப நோன்புஇத் தொடர்ப்பாடு அறுத்துஆங்கு | ||
இன்பஉலகு உச்சி இருத்தும்என் போர்களும், | ||
100 | பூத விகாரப் புணர்ப்புஎன் போர்களும் | |
பல்வேறு சமயப் படிற்றுஉரை எல்லாம் | ||
அல்லிஅம் கோதை கேட்குறும் அந்நாள், | உரை | |
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் | ||
அறனோடு என்னைஎன்று அறைந்தோன் தன்னைப் | ||
105 | பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த | |
நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி | ||
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டுஇங்கு | ||
ஒள்ளியது உரைஎன உன்பிறப்பு உணர்த்துவை | உரை | |
ஆங்குநின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக் | ||
110 | காம்புஎன தோளி கனாமயக்கு உற்றனை | |
என்றுஅவன் உரைக்கும் இளங்கொடி நல்லாய் | ||
அன்றுஎன்று அவன்முன் அயர்ந்துஒழி வாய்அலை; | உரை | |
தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் | ||
வாயே என்று மயக்குஒழி மடவாய்! | உரை | |
115 | வழுவறு மரனும் மண்ணும் கல்லும் | |
எழுதிய பாவையும் பேசா என்பது | ||
அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ | ||
அறியாய் ஆயின் ஆங்குஅது கேளாய்: | உரை | |
முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும் | ||
120 | கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் | |
முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும் | ||
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக் | ||
காப்புஉடை மாநகர்க் காவலும் கண்ணி | ||
யாப்புஉடைத் தாக அறிந்தோர் வலித்து | ||
125 | மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் | |
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க | ||
ஆங்குஅத் தெய்வதம் அவ்விடம் நீங்கா | ||
ஊன்கணி னார்கட்கு உற்றதை உரைக்கும். | உரை | |
என்திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் | ||
130 | மன்பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன் | |
துவதிகன் என்பேன் தொன்றுமுதிர் கந்தின் | ||
மயன்எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் | ||
நீங்கேன் யான்என் நிலையது கேளாய்: | ||
மாந்தர் அறிவது வானவர் அறியார் | ||
135 | ஓவியச் சேனன்என் உறுதுணைத் தோழன் | |
ஆவதை இந்நகர்க்கு ஆர்உரைத் தனரோ | ||
அவனுடன் யான்சென்று ஆடிடம் எல்லாம் | ||
உடன்உறைந் தார்போல் ஒழியாது எழுதிப் | ||
பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து | ||
140 | நாநனி வருந்தஎன் நலம்பா ராட்டலின் | |
மணிமே கலையான் வருபொருள் எல்லாம் | ||
துணிவுடன் உரைத்தேன் என்சொல் தேறுஎன, | உரை | |
தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள் | ||
ஈறுகடை போக எனக்குஅருள் என்றலும், | உரை | |
145 | துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் | |
வருவது கேளாய்: மடக்கொடி நல்லாய்! | ||
மன்உயிர் நீங்க மழைவளம் கரந்து | ||
பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய | ||
ஆங்குஅது கேட்டே ஆர்உயிர் மருந்தாய் | உரை | |
150 | ஈங்குஇம் முதியாள் இடவயின் வைத்த | |
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் | ||
தையல்நின் பயந்தோர் தம்மொடு போகி | ||
அறவணன் தானும் ஆங்குஉளன் ஆதலின் | ||
செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை | ||
155 | அறவணன் அருளால் ஆய்தொடி அவ்வூர்ப் | |
பிறவணம் ஒழிந்துநின் பெற்றியை ஆகி | ||
வறன்ஓடு உலகின் மழைவளம் தரூஉம் | ||
அறன்ஓடு ஏந்தி ஆர்உயிர் ஓம்புவை | உரை | |
ஆய்தொடிக்கு அவ்வூர் அறனொடு தோன்றும் | ||
160 | ஏது நிகழ்ச்சி யாவும் பலஉள | உரை |
பிறஅறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் | ||
அறவணன் தனக்குநீ உரைத்த அந்நாள் | ||
தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் | ||
பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து | ||
165 | மறஇருள் இரிய மண்உயிர் ஏமுற | |
அறவெயில் விரித்துஆங்கு அளப்புஇல் இருத்தியொடு | ||
புத்த ஞாயிறு தோன்றும் காறும் | ||
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா | ||
இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும் | ||
170 | தாயரும் நீயும் தவறுஇன்று ஆக | |
வாய்வ தாகநின் மனப்பாட்டு அறம்என | ||
ஆங்குஅவன் உரைத்தலும் அவன்மொழி பிழையாய் | உரை | |
பாங்குஇயல் நல்அறம் பலவும் செய்தபின் | ||
கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள | ||
175 | உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் | |
ஆண்பிறப் பாகி அருள்அறம் ஒழியாய் | ||
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து | ||
பிறர்க்குஅறம் அருளும் பெரியோன் தனக்குத் | ||
தலைச்சா வகனாய்ச் சார்புஅறுத்து உய்தி | உரை | |
180 | இன்னும் கேட்டியோ நல்நுதல் மடந்தை | |
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை | ||
வாங்குதிரை எடுத்த மணிமே கலாதெய்வம் | ||
சாது சக்கரற்கு ஆர்அமுது ஈத்தோய் | ||
ஈது நின்பிறப்பு என்பது தெளிந்தே | ||
185 | உவவனம் மருங்கில் நின்பால் தோன்றி | |
மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேள்எனத் | ||
துவதிகன் உரைத்தலும், துயர்க்கடல் நீங்கி | ||
அவதி அறிந்த அணியிழை நல்லாள் | ||
வலைஒழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் | ||
190 | உலகுதுயில் எழுப்பினன் மலர்கதி ரோன்என். | உரை |
கந்திற்பாவை வருவது உரைத்த
காதை முற்றிற்று.
|
||
மேல் |