இனிப் பிரச்சோதன
மன்னன் தன் மக்கள் கலை பயின்று நிரம்பினர் என்று தன் தேவியர்க்குக்
கூறியபொழுது,
''திருநுதல் ஆயத்துத் தேவியர்
நடுவண்
பெற்ற நாளினும் பெரும்பூட்
புதல்வரைக்
கற்ற
நாள்வயிற் கலிசிறந்
துரைஇ
மகிழ்ச்சிக் கிளவி மழையென
இசைப்ப''
(1-37: 78-81)
எனவரும் புலவர்மொழி,
''ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட
தாய்''
(குறள் : 61)
என்னும் திருக்குறளின் விளக்கமே யன்றோ?
இனிக்
''கவற்சியிற் கையறல் நீக்கி
முயற்சியில்
குண்டுதுறை இடுமணல் கோடுற
அழுந்திய
பண்டிதுறை யேற்றும் பகட்டினை
போல
இருவேம் இவ்விடர் நீக்குதற்
கியைந்தனம்''
(1 - 53 : 52 - 55)
எனவருமிது,
''மடுத்தவா யெல்லாம் பகடன்னான்
உற்ற
இடுக்கண் இடர்ப்பா
டுடைத்து''
(குறள் : 624)
எனவரும் திருக்குறள் நினைவானெழுந்ததாம். இதோ,
''ஒலித்தக்கால் என்னாம் உவரி
எலிப்பகை
நாகம் உயிர்ப்பக்
கெடும்''
(குறள் : 763)
என்னுமித் திருக்குறளை,
''மத்துறு கடலிற் றத்துறு
நெஞ்சினர்
பைவிரி நாகத் தைவாய்ப்
பிறந்த
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம்
போல
ஒழிந்தோர் ஒழிய''
(1. 56 : 272 - 275)
என்னுமி தன்கண்
காண்மின்.