எனவும் வந்துள்ள சொற்றொடர்களால் விளங்கும்.
இந்நூல்,
திருப்புல்லாணிக் கோயிலில் திருமால் முன்னர்ச்
சக்கரதீர்த்தக் கரையிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது
என்பதும், சாலிவாகன சகாப்தம் 1446 ஆம் ஆண்டில்
அரங்கேற்றப்பட்டது என்பதும் அச் சிறப்புப் பாயிரத்தால் நன்கு
விளங்குகின்றன. எனவே, இற்றைக்குச் சற்றேறக்குறைய நானூற்று
முப்பத்தெட்டியாண்டுகட்கு முந்தியது எனக் கொள்க. கி. பி. 1523
இந்நூல் அரங்கேற்றிய காலம் எனத் துணியலாம், இந்நூலாசிரியரைக்
குறித்து வேறு செய்திகள் ஒன்றும் புலப்படவில்லை.
இந்நூற்
சிறப்புப்பாயிரப் பாடல்களுள் ஒன்று அடியிற்
காட்டப்படுகிறது:
எண்சீர்
அகவல் விருத்தம்
|