(இ-ள்.)
மன்னன் மாமயில் சூகரம் - மன்னனும் மயிலும் பன்றியுமாயிருந்த உயிர், வார்புனல் -
(உஞ்சயினி நகரின் புறத்தில் ஓடும்) மிக்க நீரினால், இன்னல் செய்யும் - துன்பந்தரும்,
சிருப்பிரை யாற்றினுள் - சிருப்பிரை என்னும் யாற்றில், உன்னும் - நினைக்கத்தக்க,
ஒப்புஇல் - --, உலோகித இப்பெயர் மன்னம் - உலோகிதம் என்னும் இந்தப் பெயரைக்
கொண்ட, மீனின் வடிவினதாயிற்று - மீனாகப் பிறந்தது.
முள்ளம் பன்றி,
உஞ்சயினியின் அருகில் ஓடும் சிருப்பிரை யாற்றில் உலோகித மென்னும் மீனாகப் பிறந்ததென்க.
உலோகிதம்-சிவப்பு. சிருப்பிரையாறு, வடமொழியில் சிப்ராநதி
என்று வழங்கும். ‘உஞ்சயினிப் புறத்தாறு‘ என்பர் (200) முன்னர்.
(19)
சந்திரமதியாகிய
நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்
174. |
சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் |
|
முந்து சன்று முதலைய தாயது் |
|
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான |
|
உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில். |
(இ-ள்.)
சந்திரமதி முந்து நாய் கருநாகமாய் - சந்திரமதி முன்னே நாயும் கருநாகமுமாக, சென்று
-பிறந்து இப்போது, முதலையது ஆயது - (அவ்யாற்றில்) முதலையாய்ப் பிறந்த அது. வெந்து
வேர்த்து - (முன் கரும்பாம்பாயிருந்த தன்னைக் கொன்ற சினத்தால்) வெதும்பி வைரங்
கொண்டு, இன மீனை - சிறந்த உலோகித மீனை விழுங்குவான் - விழுங்கவேண்டி, உந்தி
உந்தி உளைந்திடு
போழ்தினில் - நகர்ந்து
நகர்ந்து (அதனைப் பிடிக்கவியலாது) வருந்துஞ் சமயத்தில். (எ-று.)
வைரத்தால் முதலை மீனை விழுங்க முயன்ற தென்க. உந்துதல்
- ஈண்டு நகர்தல். ஆயது, பெயர்.
(20)
175. |
அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் |
|
வந்து வாயின் மடுத்தது கொண்டது் |
|
கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் |
|
தந்த கொல்கென மன்னவன் சாற்றினான் |
|