அரசன் ஆணையால், முதலையைப் பலர் பலவாறு துன்புறுத்திக்
கொன்றனரென்க.
சலாகை - இருப்புக்கோல். அலை, முதல்நிலைத் தொழிற் பெயர். (22)
சந்திரமதியாகிய
முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
177. |
சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் |
|
வந்து வார்வலைப் பட்ட கராமரித |
|
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் |
|
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே. |
(இ-ள்.)
சந்திரமதி - சந்திரமதி, நாய் - நாயும், கருநாகம்ஆய் - கரும்பாம்புமாய்ப் பிறந்து,
வந்து - (பின்பு இவ்வாற்றில்) வந்து பிறந்து, வார் வலைப் பட்ட - நீண்ட வலையிலகப்பட்ட,
கார - முதலை, மரித்து - இறந்து, அந்தில் வாழ் - அவ்வுஞ்சயினியில் வாழும், புலையாளர்
சேரிவாய் வந்து - புலையர்சேரியில் வந்து, ஓர் ஆட்டின் மடப்பிணை ஆயது - ஓர் ஆட்டின்
வயிற்றில் பெண்ஆடாய்ப் பிறந்தது.
நாயும் பாம்பும்
முதலையுமான சந்திரமதியின் உயிர் சேரியில் பெண்ணாடாய்ப் பிறந்த தென்க.
பிணை - ஆடு முதலியவற்றின் பெண். மடம், இளமை, ஆடு,
யாடு என்பதன் மரூஉ. தம், சாரியை. (தொல். எழுத். 191).
(23)
178. |
மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை |
|
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர் |
|
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் |
|
குற்ற செய்கைக் குரித்தென வோதினார். |
(இ-ள்.)
மற்றை மீனும் - அந்த உலோகிதம் என்னும் மீனும், ஓர் வார் வலை பட்டதை - நீண்டதொரு
வலையில் அகப்பட்டதை, அற்றம் - அச்சமயத்தில், அருள் இல் அந்தணர் கண்டனர் -
அருள் இல்லாத சில அந்தணர்கள் கண்டு, (அரசனை யடைந்து), கொற்றம் மன்னவ - வெற்றி
வேந்தே, நின் குலத்தார்களுக்கு - உன் குலத்து முன்னோர்.
|