கொண்ட
ஆடு, ‘சினை கொண்டாடு‘ என வந்தது. யசோமதியின் அம்பு பட் டிறந்த பெண்யாட்டை, ‘முன்
சினை கொண்ட ஆடு‘ என்றார். (44)
199. |
சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் |
|
வந்தி டங்கரு மாகிய வாடது |
|
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து |
|
வந்து மாயிட மாகி வளர்ந்ததே. |
(இ-ள்.) சந்திரமதி - --,
நாய் கருநாகமாய் - நாயும் கரும்பாம்புமாகி, வந்து - சிருப்பிரையாற்றில் வந்து,
இடங்கரும் ஆகிய ஆடது - முதலையுமாகிய ஆடானது, பல் பொருள் நந்தும் நாடு - பல்வகைப்
பொருள்களும் நிறைந்த நாடாகிய, கலிங்கத்து வந்து - கலிங்க தேசத்தில் வந்து, மாயிடம்
ஆகி - எருமையாய்ப் பிறந்து, வளர்ந்தது - --,
சந்திரமதி,
கலிங்க தேசத்தில் எருமையாய்ப் பிறந்தாளென்க.
சந்திரமதி, மீண்டும் மீண்டும் பெண்பிறவியே பெற்றமை யறிக. இடங்கர் - முதலை.
மணிகள் முதலியனவும் நிறைதலால், ‘பல் பொருள் நந்தும்‘ என்றார். மயிடம் - மாயிடம்
என நீண்டு நின்றது; விகாரம். இது, மஹிஷம் என்னும் வட சொல்லின் திரிபு. சந்திரம்மதி,
விரித்தல் விகாரம். (45)
200. |
வணிகர் தம்முடன் மாமயி டம்மது |
|
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் |
|
அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் |
|
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே. |
(இ-ள்.) வணிகர் தம்முடன் -
கலிங்க நாட்டின் வியாபாரிகளோடு (போந்த), மா மயிடம் அது - அந்தப் பெரிய எருமையானது,
பணிவு இல் பண்டம் - தாழ்வில்லாத மிக்க பண்டங்களை, பரிந்து உழல்கின்ற நாள் -
சுமந்து திரிகின்ற நாட்களில், வணிகர் - அவ்வியாபாரிகள், அணிகொள் உஞ்சயினி
புறத்து - அழகுடைய உஞ்சயினி நகரத்தின் பக்கத்தே ஓடும், ஆற்று |