அயல்
வந்து - சிருப்பிரையாற்றின் கரையில் போந்து, மகிழ்ந்துவிட்டார்கள் - மகிழ்ந்துதங்கினார்கள்.
(எ-று.)
எருமையுடன் போந்த வணிகர் சிருப்பிரையாற்றயல் தங்கினார்க ளென்க.
எருமைமேல் ஏற்றி வந்த பண்டம் பித்தளைச் சாமான் முதலியன வென்று கன்னட புராணத்திலுளது,
நாட்டிற்கு அணியாவன; ‘ பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்
கிவ் வைந்து‘ என்னும் திருக்குறளால் அறியலாகும். விடுதல் - தங்குதல். (46)
201. |
தூர பாரஞ் சுமந்த துயரது |
|
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள் |
|
ஆர மூழ்குவ1
தம்மயி டங்கரை |
|
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே. |
(இ-ள்.) தூரம் பாரம் சுமந்த துயர் அது தீர - நெடுந்தொலைவிலிருந்து
சுமை சுமந்துவந்த வருத்தம் நீங்க, ஓடும்-நீர் பெருகியோடும், சிருப்பிரை ஆற்றின்
உள் - --, ஆரமூழ்குவது - நன்றாக மூழ்குவதாகிய. அம்மயிடம், - அந்த எருமை, கரை சேரும்
மாவினை - கரைக்கு வரும் (அரசன்) குதிரையை, சென்று எறிந்திட்டது - (அதன் அருகில்)
சென்று குத்திக் கொன்றுவிட்டது.
(எ-று.)
ஆற்றில் முழுகிய எருமை, குதிரையைக் கொன்றதென்க.
சுமந்த துயர், சுமந்ததனால் உண்டான துயர்; எச்சம் காரணப் பொருளில் வந்தது. ஆர
- நிறைய; உடல் முழுவதும் தண்ணீரில் பொருந்த. (47)
202. |
வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால் |
|
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம் |
|
அரைச வாகன மாயது போயதென் |
|
றுரைசெய் தாரர சற்குழை யாளரே. |
|