உருவினள்
ஆயினள் - நீர் ஒழுகும் புண்ணையுடைய உடம்பினையுடையளாய், முழுகு சீயின் முடைப்பொலி
மேனியள் - உடல் நிறைந்த சீயினால் முடை நாற்றம் நாறும் மேனியளாய், தொழுவல் பல்
பிணி நோய்களும் - தொழுநோய் முதலிய வலிய பல பிணிகளும், துன்னினாள் - அடைந்தாள்
(எ-று.)
அரசி தொழுநோய் முதலிய பல நோய்களை அடைந்தாளென்க.
அஃகுதல் - குறைதல், முடை - துர்நாற்றம், இந்நோய் இடையில் தோன்றியதாதலின்,
‘ஆயினள்‘ என்றார். பிணிநோய் - பிணிக்கும் நோய்; ஒருபொருட் பல்மொழியுமாம்.
211. |
உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள் |
|
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை |
|
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை |
|
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல. |
(இ-ள்.) உம்மை வல்வினையால்-
முற்பிறப்பிலாகிய வலிய தீவினையினால், உணர்வு ஒன்று இலாள் - சிறிதும் அறிவு இல்லாதவளாயினாள்,
இவை - நோய் முதலிய இவை, இம்மை செய்த வினைப்பயனே - இப்பிறப்பில் (இவள்) செய்த
தீவினைப் பயனே, இனி, இனிமேல், இவ்வினை - இவ்வினைகள், எம்மையும் நின்றிடும்
- எப்பிறப்பிலும் நின்று வருத்தும், இவள் பொன்றினும் - இவள் இறந்தாலும், பொன்றல
- (இவ்வினைகள்) நாசமடையா, பொய்ம்மை அன்று - இது நிச்சயம். (எ-று.)
உம்மைவினையால் பாகனோடு சேர்க்கை யாயிற்று; பாகன் சேர்க்கையால் இம்மையில் நோயும்
மறுமையில் நரகபந்தமும் ஆயின என்க.
உம்மை - முற்பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. எம்மையும் - எப்பிறப்பும். அமிர்தமதி,
முற்பிறப்பின் வினைத் தொடர்பால் பாகனோடு சேர்ந்தனள் ஆதலின் அதனை, ‘உம்மை
வல்வினையால் உணர்வொன்றிலள்‘ என்றும், தீயஎண்ணத்தால் குஷ்டரோஹியுடன் சேர்ந்ததனால்
இப்பிறவி
|