- 232 -

மனம் கொளா - மனத்தில் நினைப்பதற்கும் இயலாத, ஒருமானுட நாயினை - நாய்போன்ற நீகனை, கலந்தனள் -கூடிக் கலந்தாள். (எ-று.)

    அரசனை யொழித்து நீசனைச் கூடினாளென்றா ரென்க.

அண்ணல் - தலைவன். கனம் - மிகுதி.  கலக்குதல் - நிறையழித்தல். (யசோ. 105ல்) ‘புண்களும் கண்கள் கொள்ளா‘ என்றாராகலின், ஈண்டு, ‘மனங்கொளா, நாய்‘ என்றார். ஒரு, இழிவினை உணர்த்திற்று.  கொளா - கொள்ளாத; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.        (54)

209.  குட்ட மாகிய மேனிக் குலமிலா
  அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
  நட்ட மாகிய நல்லெழின் மேனியள்
  குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.

   (இ-ள்.) (அமிர்தமதி), குலம் இலா - குலநலம் இல்லாத, குட்டமாகிய மேனி - குட்டநோய் மிக்க உடம்பினையுடைய, அட்டபங்கனோடு - --, ஆடி அமர்ந்த பின் - (காமவிளையாட்டில்) ஆடிச் சேர்ந்தபிறகு, (அதனால்), நட்டம் ஆகிய நல் எழில் மேனியள்- சிறந்த அழகு கெட்டுப்போன உடம்பினளாகி, குட்டநோயில் - --, குளித்திடுகின்றனள் - மூழ்கியுள்ளாள். (எ-று.)

அரசி, பாகனைச் சேர்ந்த பின் அழகு கெட்டுக் குட்டநோயுற்றாளென்க.

மேனி - சரீரச் சாயல்; ஒளி.            (55)

210.  அழுகி நைந்துட னஃகு மவயவத்
  தொழுகு புண்ணி னுருவின ளாயினள்
  முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
  தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.

(இ-ள்.) (அரசி), அழுகி நைந்து - அழுகிமெலிந்து, உடன் அப்பொழுதே, அஃகும்  அவயவத்து - குறையும்   அவயவங்களோடு,    ஒழுகு  புண்ணின்