மனம் கொளா - மனத்தில் நினைப்பதற்கும் இயலாத, ஒருமானுட நாயினை - நாய்போன்ற
நீகனை, கலந்தனள் -கூடிக் கலந்தாள். (எ-று.)
அரசனை யொழித்து நீசனைச் கூடினாளென்றா ரென்க.
அண்ணல் - தலைவன். கனம் - மிகுதி. கலக்குதல் - நிறையழித்தல். (யசோ. 105ல்)
‘புண்களும் கண்கள் கொள்ளா‘
என்றாராகலின், ஈண்டு, ‘மனங்கொளா, நாய்‘ என்றார். ஒரு, இழிவினை உணர்த்திற்று.
கொளா - கொள்ளாத; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (54)
209. |
குட்ட
மாகிய மேனிக் குலமிலா |
|
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின் |
|
நட்ட மாகிய நல்லெழின் மேனியள் |
|
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள். |
(இ-ள்.) (அமிர்தமதி), குலம் இலா - குலநலம் இல்லாத, குட்டமாகிய மேனி - குட்டநோய் மிக்க உடம்பினையுடைய, அட்டபங்கனோடு
- --, ஆடி அமர்ந்த பின் - (காமவிளையாட்டில்) ஆடிச் சேர்ந்தபிறகு, (அதனால்), நட்டம்
ஆகிய நல் எழில் மேனியள்- சிறந்த அழகு கெட்டுப்போன உடம்பினளாகி, குட்டநோயில்
- --, குளித்திடுகின்றனள் - மூழ்கியுள்ளாள். (எ-று.)
அரசி, பாகனைச் சேர்ந்த பின் அழகு கெட்டுக் குட்டநோயுற்றாளென்க.
மேனி - சரீரச் சாயல்; ஒளி. (55)
210. |
அழுகி நைந்துட னஃகு மவயவத் |
|
தொழுகு புண்ணி னுருவின ளாயினள் |
|
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் |
|
தொழுவல் பல்பிணி நோய்களுந்
துன்னினாள். |
(இ-ள்.) (அரசி), அழுகி நைந்து - அழுகிமெலிந்து, உடன் அப்பொழுதே,
அஃகும் அவயவத்து - குறையும் அவயவங்களோடு, ஒழுகு புண்ணின்
|