- 231 -
207.  இன்னு மாசை யெனக்குள திவ்வழித்
  துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது
  தன்னி னாய குறங்குக டித்தது
  தின்னி னாசை சிதைந்திட மென்றனள்.

(இ-ள்.) (அரசி, அந்தரங்க சேடியரை நோக்கி), இன்னும் ஆசை - இன்னும் ஓர் ஆசை, எனக்கு உளது-எனக்கு இருக்கின்றது, (அஃதியாதெனின்), இவ்வழி துன்னி வாழ் தகர் ஒன்று உளது - இவ்வரண்மனையைச் சேர்ந்து வாழும் ஆட்டுக்கிடாய் ஒன்று இருக்கின்றது, இன்று -இப்பொழுதே, அது தன்னின் ஆய குறங்கு - அவ்யாட்டின் தொடை யூனை, கடித்து அது தின்னின்-கடித்துத் தின்பேனாயின், ஆசை சிதைந்திடும், என் ஆசை தீர்ந்துவிடும் (ஆதலின் கடிது கொணர்க), என்றனள் - என்று ஏவினாள். (எ-று.)

அமிர்தமதி, தகரின் தசையைத் தின்ன விரும்பினாளென்க.

குறங்கு - தொடை. ஒன்றன் உடல் சுவையுண்டார் மனம் படைகொண்டார் நெஞ்சம்போல் செல்லுமாகலின், எருமைத்தசையைத் தின்0றவள் ஆட்டின் தசையை விரும்பினாள்.      (53)

இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர்

பேசிக்கொள்ளுதல்

208.  அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
  சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
  கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
  மனங்கொ ளாவொரு மானுட நாயினை.

(இ-ள்.) அனங்கனான பெரும் தகை அண்ணலை - காமனாகிய பெருந்தன்மையுடைய அரசனை, சினங்கொளா - சினங்கொண்டு, நஞ்சினில் -விஷத்தால், உயிர் செற்றனள் - மடித்தாள்; கனங்கொள் காமம் கலக்க -மிக்குற்ற கழிகாமம் தன் உள்ளத்தைக் கலக்க (அதனால்),