218. |
கண்டு மன்னவன் கண்களி கொண்டனன் |
|
சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக் |
|
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன் |
|
மண்டு போர்வினை வல்லவு மாயவே. |
(இ-ள்.) மன்னவன் - யசோமதி, கண்டு - (கோழிகளிரண்டையும்) கண்டு,
கண் களிகொண்டனன் - கண் களி கூர்ந்தவனாகி, சண்டகன்மியைத் தந்து - தளவரனாகியசண்ட
கருமனை வருவித்து (அவனிடம்), வளர்க்க என-(இந்தக் கோழிகளை) வளர்ப்பாயாக என்று
பணிக்க, அவன் - அந்தச் சண்ட கருமன், கொண்டுபோய் - (அவற்றைக்) கொண்டுபோய்,
கூட்டுள் வளர்த்தனன் - கூட்டில் வைத்து வளர்த்து வரலானான் (அவ்விரு கோழிகளும்),
மண்டு போர் வினை - மிக்குச்
செல்கின்ற போர்த்தொழிலில், வல்லவும் ஆய - திறமையுடையனவும் ஆயின. (எ-று.)
கோழிகள் சண்டகருமனிடம் வளர்ந்து போர்த் தொழிலில் திறமை பெற்றன வென்க.
(64)
219. |
தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை
சாபம்போற் சவியன்ன |
|
மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை1
மணிமுடி தனையொத்த |
|
வொளிரு பொன்னுகிர்ச்2
சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ |
|
தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே. |
(இ-ள்.)
தரளமாகிய நயனத்தொடு - சலிப்பனவாகியகண்களும், சாபம்போல் அம் சிறை - இந்திரதனுசைப்
போன்ற அழகிய சிறைகளும், மணிமுடிதனை யொத்த சுடர்சிகை - மாணிக்கமணி யிழைத்த முடிபோ
லொளிரும் கொண்டையும், ஒளிரும் பொன் உகிர் சரணங்கள் - விளங்குகின்ற பொன்போன்ற
நகங்களையுடைய கால்களும், வயிரமுள் - வயிரம் போலும் முள்ளும் உடையனவாய், ஒப்புஇல
போரின்கண் - போர்த்தொழிலில் நிகரில்லாதனவாய், தளர்வு இல்வீரியம் - குன்றாத
வீரியமும் அடைந்து, தகைபெற - அழகு உற,
|