- 239 -

வளர்ந்தன - --, தமக்கு - அக்கோழிகளுக்கு, இணை ஒப்பாவன, அவை தாமே -அந்தக் கோழிகளே; பிற இல்லை.

கோழிகள் மிக்க அழகுடையனவாய்ப் போர்ப்பயிற்சியும் பெற்றிருந்தன வென்க.

தானம் - முத்தும்ஆம்.  சாபம் - வில். சவி - ஒளி. சனம், (வடமொழி) மக்கள்.  சிகை - உச்சிக் கொண்டை.  மணி, சிவந்த மாணிக்கமணி.  முள், நகங்களுக்கு மேலிடத்த தாய்க்காலிலுள்ள விரல்.

‘சவியன்ன மருளும் மாசனம் வளர்விழி‘ என்னும் பகுதி பிழைப்பட்டிருக்கும் எனத் தோன்றுகின்றது;  இதன் பொருள் அமைதியாயில்லை.  இனி, ‘தரளமாகிய நயனத் தொடஞ்சுர சாபம்போற் சவி என்ன மருளு மாசனம் வளர் சிறை‘  என்பது பாடமாகக் கொள்ளின் பொருள் சிறக்கும். ‘சுரசாபம்‘ என்னுஞ் சொல் கன்னட காவியத்திலும் வந்துளது.  “தரள நயநௌ தாரம்யாமை; பதத்ர பரிச்சதை; வயஸி தததௌ சூடாரத்னம் ஜபா குஸுமச்சவி, கனகநிகஷச்சாயா சௌர்யோல்லஸச் சரணாங்குரௌ, ஸுக மவ்ருததரம் தௌ தத்வாஸெ ஸுபஞ்சா வாஸிதௌ.” என்னும் வாதிராஜர் (3, 84) வாக்கு ஈண்டு நோக்கற் பாலது.                (65)

மூன்றாஞ் சருக்கம் முற்றிற்று.

-------