நான்காஞ்
சருக்கம்
---::
::---
220. |
செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி
வண்டுந் தேனுங் |
|
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு
குழுமி யார்ப்பச |
|
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை
சென்று வீச |
|
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப்
பருவ மாதோ. |
(இ-ள்.) செந்தளிர் புதைந்த சோலை - சிவந்த தளிர்கள் செறிந்த
சோலையில், திருமணி வண்டும் - அழகிய நீலமணிபோலும் வண்டினமும், தேனும் - தேனினமும்,
கொந்துகள் - பூங்கொத்துக்களை, குடைந்து - --,கூவும் -கூவுகின்ற, குயிலொடு - --,
குழுமி ஆர்ப்ப - சேர்ந்து ஒலிக்க, தென்றல் - --, செந்துணர் அணைந்து - பூங்கொத்துக்களிலுள்ள
தாதுக்களில் படிந்து, திசை திசைசென்று வீச - திசைதோறும் சென்று வீச, வளர்மதுப்
பருவம் -இளவேனிற் பருவம், வந்து - வந்துதனால், எங்கும்- எவ்விடத்தும், உளம் மகிழ்ந்தது
- உயிர்களின் மனம் மகிழ்ந்தது.
இளவேனிற்பருவம் வந்ததென்க.
புதைந்த - அடர்ந்த. தேனும் வண்டும் வேறு வேறுஇனம். சீவக. 892 இன் உரை பார்க்க.
வசந்த காலத்தில்மாவின் மொட்டுக்களைத் தின்று குயில் கூவுவதனால், ‘கொந்துகள் குடைந்து
கூவுங் குயில்‘ என்றார்.யத்கோகில: கில மதௌ மதுரம் விரௌதி, தத் சாரு
சூத கலிகா நிகரைக ஹேது‘ பக்தாமரம்.
6. புனைந்த என்றும் பாடம்.
உளம்
- உயிர்களின் உள்ளம். அளைதல் - படிதல். (1)
221. |
இணர்ததை1
பொழிலி னுள்ளா லிசோமதி2 யென்னுமன்னன் |
|
வணர்ததை குழலி புட்பா வலியெனுந்
துணைவி யோடு |
|
வணர்ததை வல்லி புல்லி வளரிளம்
பிண்டி வண்டர்3 |
|
இணர்ததை தவிசி னேறி யினிதினி
னமர்ந்தி ருந்தான். |
1 தழை.
2 னிசோமதி.
3 வண்டர்.
|
|