(இ-ள்.) இணர் ததை பொழிலின் உள்ளால் - பூங்கொத்துக்கள் செறிந்த
சோலையினிடத்தே, இசோமதி என்னும் மன்னன் - யசோமதி என்னும் அரசன், வணர் ததை
குழலி - சுருண்டு செறிந்த கூந்தலையுடையளான. புட்பாவலி எனும் - புஷ்பாவலி என்னும் பெயரையுடைய,
துணைவியோடு - பட்டமகிஷியோடு, வணர்ததை - வளைந்து அடர்ந்த, வல்லி புல்லி - கொடிகளைத்
தழுவி, வளர் இளம் பிண்டி-வளர்ந்த இளமையான அசோகமரத்தின்கீழ், (அமைந்தவசந்த
மண்டபத்தில்), வண்டு ஆர் இணர்ததை தவிசின்ஏறி - வண்டினம் நிறைந்த பூங்கொத்துக்கள்
செறிந்த பூவணையிலேறி, இனிதினின் அமர்ந்திருந்தான் - இன்பத்தோடு வீற்றிருந்தான்.
(எ-று.)
மன்னன், வசந்த காலங் கழித்தற்கு தேவியுடன் சோலையிடத்தே
தங்கினானென்க.
வணர் - வளைவு, ததைதல் - நெருங்குதல். (2)
222. |
பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப்
பாவை1 பைம்பொற் |
|
சூடக
மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி |
|
நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார் |
|
பாடலி னமிர்த வூறல் பருகினன்
மகிழ்ந்தி ருந்தான். |
(இ-ள்.)
(அவ்வரசன்), பாடகம் இலங்கும் - பாடகம் விளங்கும், செங்கேழ் சீறடி - செந்நிறத்தவாகிய
சிற்றடிகளையுடைய, பாவை - பாவை போன்ற, நாடக மகளிர் - நாடகமாடும் மகளிர், பைம்பொன்
- பசிய பொன்னாலாய, சூடகம் அணி மென் தோளின் தொழுதனர் - வளைஅணிந்த மெல்லிய
கைகளால் தொழுது, துளங்கத்தோன்றி - (கண்டோர் மனம்) சலனமுறத்தோன்றி, ஆடும் நாடகம்
நயந்து - ஆடுகின்ற நாடகத்தை விரும்பிப் பார்த்து, நல்லார் பாடலின் அமிர்த வூறல்
- பாடல் மகளிரின் கீதாமிருதத்தின் இனிமையை, பருகினன் - செவியாரவுண்டு, மகிழ்ந்திருந்தான்
- --. (எ - று.)
|