என்றும் கூறி இவ்வரச குடும்பத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
இங்ஙனம்
மங்கலமாகிய மனைமாட்சி பெற்ற இவ்வேந்தன் மற்று அதற்கு நன்கலமாகத்
திங்கள்
வண்ணனாகிய விசயனையும் கார்முகில் வண்ணனாகிய திவிட்டனையும்
மக்களாகப் பெற்று
மகிழ்கின்றான். சான்றோர் கேண்மை யோடும் சிறந்த
வாழ்க்கைத்துணைவியரோடும்
ஒப்பற்ற மக்களோடும் திகழ்கின்ற இவ்வரச
குடும்பம் ஓர் அனபுக்கடலாகவே
காட்சியளிக்கின்றது. இவ்வரச குடும்பம்
கம்பநாடர் காட்டும் தசரத மன்னனுடைய
குடும்பத்தையே பெரிதும் ஒத்துத் திகழ்கின்றது.
இங்ஙனம் கூறுங்கால் கம்பர் காவியத்திற்கு
இக்காவியமே படிச்சந்தமாக
அமைந்தது என்பது நம் கருத்தாகும்.
இக்காவியத் தலைவனாகிய திவிட்டனையும் விசயனையும் கருதுங்கால்
வைணவசமயத்தார்
கூறும் மாயோனையும் பலதேவனையும் நாம் நினையாதிருத்தல்
இயலாது. பல்லாற்றானும்
இவர்கள் மாயோனையும் பலதேவனையுமே ஒத்துத் திகழ்கின்றனர். |