சுபருணை காஞ்சியில் முத்தீசரை வணங்கி வரம்பெற்றுக் காசிப முனிவர்
அருளால் கருடனை ஈன்று வளர்த்து அவனுக்குக் குறையைக் கூறினள்.
கருடன் தேவலோகம் சென்று இந்திரனைப் புறங்காணச் செய்து
அமுதத்தைக் கைப்பற்றி வருங்கால் தடுத்த திருமாலொடு இருபத்தொரு
நாள் நிகழ்ந்த கடும்போரில் வெற்றி தோல்வி கண்டிலன்.
திருமால் வியந்து ‘வேண்டுவகேள் தருதும்’ என்றனர். கருடன்
கேட்டு, ‘நினக்கு யாது வேண்டும் அதனை என்பாற் பெறுக’ எனத்
திருமாலை நோக்கிக் கூறினன். ‘எனக்கு வாகனமாம் வரத்தைத் தருக’ என்ற
திருமாலுக்கு வருந்தியும் சொல் தவறாது ‘அவ்வாறாகுக’ என்று பின் இசைவு
பெற்றுச் சென்று, அமுதத்தைக் கத்துருவிற்குக் கொடுத்துத் தாயைச் சிறைவீடு
செய்தனன் கருடன். கருடன் தனது தாய் அருச்சித்த முத்தீசரை வணங்கிக்
கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளைக் கொல்லும் வரத்தைப் பெற்றனன்.
ஏகாலியர் குலத்திற் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனாரும்
முத்திபெற்றனர். கருடன் வழிபட்ட கருடேசர், முத்தீசர்க்கும் பின்புறம்
கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் காந்திரோடில் உள்ளது.
மணிகண்டேசம்: தேவரும், அசுரரும் பிரமனொடும் சூழ்ந்து திருமாலை
வணங்கி இறப்பினை வெல்லும் வழியை அருளவேண்டினர். திருப்பாற்
கடலினின்றும் அமுதம் பெற்றுண்டலே உபாயமென மதித்து மந்தரத்தை
மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு சுராசுரர் கடைந்தபொழுது
அங்கு வந்த வாலி, இயலாத அவரை விலக்கி மலை கடலில் அழுந்தாதபடி
திருமால் ஆமையாய்த் தாங்கக் கடைந்தனன். வாசுகி வலிபொறாது
வாய்நுரையைக் கக்கிப் பெருமூச்செறிந்தனன். அக்கலப்பினால் ஆலாலம்
என்னும் கொடியவிட மெழுந்து உலகைக் கனற்றுவதாயிற்று.
வாலி ஓட்டெடுப்பப் பொன்னிறம் போய்ப் புகைநிறமுற்ற பிரமனும்,
வெண்ணிற மிழந்து கரிய நிறமுற்ற மாலும் நிறமாறிய பிறர் பிறரும்
கயிலையைச் சரணடைந்தனர். ‘அஞ்சலீர்’ என்றருள் செய்த சிவபிரானார்
திருவுளக் குறிப்பின்படிவிடம் யாண்டும் பரவிச் செறிந்து நின்றநிலை நீங்கி
நீட்டிய மலர்க் கரத்தில் மலரில் வண்டுபோலத் தங்கித் திருக்
கண்ணோக்குற்றுச் சிற்றுருவாய் மெய்யன்பர் திருமனம் இறைவன் ?
திருவடிக்கீழ் ஒடுங்குமாறுபோல அடங்கியது. திருவடித் தொண்டராகிய
தமிழ் முனிவர் திருக்கரத்தில் உழுந்தளவாகக் கடல்நீர் சுருங்குமேல்
இந்நிகழ்ச்சி புகழ்ந்துரைக்கும் பொருளதோ? இறைவன் சங்கற்பப்படி
அம்மையார் திருக்கண்களால் ஆலமுண்டு அமுதம்
|