32.
ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக
மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன
நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ
நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.
----
வையம்
நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
-
பெரிய புராணம்.
|
வான்முகில்
வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம். -
கந்தபுராணம்.
|
மல்குக
வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.- திருவிளையாடற் புராணம்.
|
திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி
சேரும்நின்றன்
மருவார் மரபும் திருநீறும் கண்டியும்
வாழ்கஅருட்
குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்
கோநிரைகள்
தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த
தேசிகனே. -ஆதீன
அருள்நூல்.
|
|
|
|