| 11. ஆதீனக் கோயில்கள் பலவற்றில் நூலகங்கள் 
 அமைத்தும் மாலைநேரத்தில் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு குழந்தைகட்குத் திருமுறை 
 வகுப்புக்கள் நடத்தியும் உதவுவது. | 
 
 | 12. 
 சமய நூல்களை ஆய்வு நோக்கோடு எழுதி வெளியிட முன்வருவோர்க்கு உதவுவது. | 
 
 | 13. 
 ஆதீனத்திருக்கோயில்களில் பழுதடைந்த கட்டிடப் பகுதிகளை இடித்துப் புதுப்பித்தும் 
 12 ஆண்டுகட்கு ஒருமுறை மூர்த்திகட்கு அஷ்டபந்தனம் சாத்தியும் திருக்குட நீராட்டு 
 விழா நடத்துவது. | 
 
 | 14. 
 ஆதீனத் திருமடத்தில் பெரியதொரு நூலகம் அமைத்துப் பழைமையான ஓலைச்சுவடிகளையும் 
 நூல்களையும் பேணி வருவது. | 
 
 | 15. 
 கல்வி பயிலும் ஏழை மாணவர்கட்குக் கல்விக் கட்டணம் புத்தகங்கள் வழங்கி 
 உதவுவது. | 
 
 | 16. 
 மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்து நகராட்சிக்கு உதவியதுபோலச் 
 சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை சென்னை அடையாறு கான்சர் இன்ஸ்டியூட் 
 போன்ற பொது நிறுவனங்களுக்கும் பெருந்தொகை உதவி வருவது. | 
 
 | 17. 
 ஆதீனக் குரு முதல்வர் குரு பூசைவிழாவில் சமய வகுப்புக்கள் கருத்தரங்குகள் திருநெறிய 
 தெய்வத் தமிழ் மாநாடு முதலியன நடத்திவருவது. | 
 
 | 18. 
 அவ்வப்போது மக்கட்கு எல்லாச் சமய தத்துவங்களையும் மாநாடுகள் மூலம் உணர்த்திப் 
 பொதுவாக அனைத்துச் சமய தத்துவங்களையும் மக்கள் அறியும்படிச் செய்வது. | 
 
 | 19. 
 தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் சமயப் பிரசார நிலையம் அமைத்துச் சமய 
 வகுப்புக்கள் நடத்தியும், ஆதீனத்திருக்கோயில்களில் நிகழும் சிறப்பு 
 விழாக்களின் பிரசாதங்களை அங்குள்ள மக்கட்கு வழங்கியும் வருவது. | 
 
 | 20. திங்கள் 
 தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் பொதுமக்கட்கு 
 அருளாசி வழங்குவது. | 
 
 | 21. திருவாமூரில் 
 அப்பருக்குத் திருக்கோயில் எடுப்பித்துத் |